துலாம் ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் துலாம் ராசிக்கு ஆறாமிடமான மீன ராசியில் சஞ்சரித்து வரும் குருபகவான் அங்கிருந்து மேஷ ராசிக்கு 22-04-2023 அன்று மாறுகிறார். பொதுவாக குருவிற்கு 7ம் இடம் ஒரு சிறப்பான இடமாக கருதப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மன நிம்மதியை தரும். கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வது மட்டுமல்லாமல் மனதில் நினைத்த காரியம் எல்லாம் நடக்கும். குடும்பத்தில் சுபிட்சமும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் முழுமையாக முடிவுக்கு வரும். உடல் உபாதைகள் நீங்கும். குருபகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். 6-ம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குருபகவான் தனது நேரடி பார்வையை உங்கள் ராசியின் மீது செலுத்துவதால் குரு பலம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் பெரியளவில் வெற்றி காண முடியும். இது வரை உங்கள் ராசிக்கு 6 ம் இடத்தில் இருந்த குரு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார் .இது குருவுக்கு மிகவும் நல்ல இடம். உங்கள் ராசிக்கு 4க்கும் 7க்கும் உடைய குரு உங்கள் ராசியை பார்ப்பது புகழ் அந்தஸ்து.கௌரவம். நண்பர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். இது வரை 6ல் குரு இருந்ததால் கடன்,போட்டி, பொறாமை, ஏதிரி,நோய், மருத்துவ செலவு, என பல பிரச்சினைகள் இருந்து வந்தது, இனி அந்த நிலைகள் மாறி எல்லா விசயங்களும் சாதகமாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பண வரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். நட்பு வழியில் அனுகூலம் ஏற்படும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு, வாகனம்,வாங்கும் எண்ணம் மேலோங்கும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை பல விதத்திலும் உதவி செய்வார். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். முக்கிய சமயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். உங்கள் மதிப்பும், மரியாதையும் வெகுவாக உயரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். தடைப்பட்ட பல சுப காரியம் இனிதே நடைபெறும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். குடும்ப நிதி நநீ,நிலைமை சீரடையும். உடல் உபாதைகள் நீங்கும். உங்களுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிக்க முடியும். வெளியில் கொடுத்த கடன் கைக்கு திரும்ப வரும். பணவரவும் அதிகரிக்கும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். சனி பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். நிழல் கிரகமான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதும் உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அக்டோபரில் ஏற்படக்கூடிய ராகு - கேது பெயர்ச்சி மூலம் ராகு 6ம் வீட்டுக்கும் கேது 12ம் ஆம் வீட்டுக்கும் மாறுதலாக இருப்பது நல்ல ஒரு அமைப்பாகும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். குரு பகவானின் பார்வை பலம் அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் ராசியின் மேல் படுவதால் நற்பலன்களை நிச்சயம் உண்டு.
பரிகாரம் : பெருமாளை வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831